
புத்ராஜெயா, ஜூன் 15- டீசல் இலக்கு மானியம் இம்மாதம் 10ஆம் தேதி
அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொருள் மற்றும் சேவை விலையைத
தாங்கள் உயர்த்தப்போவதாக அறிவித்த 10 நிறுவனங்கள் விசாரணைக்கு
அழைக்கப்பட்டன.
ஃப்ளீட் கார்டு விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்ட நான்கு நிறுவனங்கள்
பொருள் மற்றும் சேவைக் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான
அறிவிப்பை வெளியிட்டுள்ளது தொடக்கக்கட்ட விசாரணையில் தெரிய
வந்துள்ளது என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின
அமைச்சர் அர்மிஸாம் முகமது அலி கூறினார்.
இதர ஆறு நிறுவனங்களும் மானிய டீசல் கட்டுப்பாட்டு முறை 2.0
(எஸ்.கே.டி.எஸ்.) பட்டியலில் இடம் பெறவில்லை என்று அவர் இன்று
வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
Bernama

