
நவம்பர் 19 தேதி பொதுத் தேர்தலில் மலேசியர்கள் வாக்குச் சாவடிகளுக்கு செல்வதற்கு வசதியாக நவம்பர் 18-ஆம் தேதி சிறப்பு பொது விடுமுறையாக அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று பொதுச் சேவை ஊழியர் சங்கங்களின் காங்கிரஸ் (கியூபெக்ஸ்) பரிந்துரைத்துள்ளது.
வாக்களிக்கும் தேதி சனிக்கிழமை வந்தாலும், பல மலேசியர்கள் தாங்கள் வேலை செய்யும் இடத்தை விட தொலைவில் வாக்களிப்பதால் கூடுதல் பொது விடுமுறை ஒரு நாள் முன்னதாக வழங்கப்பட வேண்டும் என்று அதன் தலைவர் டத்தோ அட்னான் கேட்டுக் கொண்டுள்ளார்.

