
பத்து நாடாளுமன்ற தொகுதியில் பத்து முனை போட்டி ஏற்பட்டாலும் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிடும் கெஅடிலான் வேட்பாளர் பிரபாகரன் அமோக வெற்றி பெறுவார் என்று வாக்காளர்கள் கூறுகிறார்கள்.
Free malaysia today இணையத்தளம் இன்று மேற்கொண்ட ஆய்வில் பத்து நாடாளுமன்ற தொகுதியில் பிரபாகரன் அலை வீசுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.
பத்து தொகுதியில் பிரபாகரன் சிறந்த முறையில் சிறப்பாக சேவையாற்றி வருகிறார்.
பத்து தொகுதி வாக்காளர்கள் அவரை பெரிதும் ஆதரிக்கிறார்கள்.
தியான் சுவா மற்றும் டத்தோ கோகிலன் போட்டியிட்டாலும் பிரபாகரன் வெற்றி பெறுவது உறுதி என்று வாக்காளர்கள் கூறுகிறார்கள்.

