சிறுமி Albertine Leo Jia Hui கடத்தல் விவகாரம் தொடர்பில் ஐவர் கைது

பெட்டாலிங் ஜெயா:

கடந்த சனிக்கிழமை ஜொகூர் பாருவில் உள்ள இஸ்கந்தர் புத்ரியில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட 6 வயது சிறுமி, Albertine Leo Jia Hui இன்று அதிகாலை 4 மணியளவில் சிலாங்கூர் பத்தாங் காலியில் மீட்கப்பட்டது தொடர்பில் ஐவரைக் காவல்துறை கைது செய்துள்ளது.

Albertine Leo Jia Hui பத்தாங் காலியிலுள்ள ஒரு தங்கு விடுதியில் 31 வயதுடையச் சந்தேக நபருடன் மீட்கப்பட்டதை ஜொகூர் மாநிலக் காவல்துறை தலைவர் எம்.குமார் உறுதிப்படுத்தினார்.

குழந்தை கடத்தப்பட்டதன் நோக்கம், சிண்டிகேட் தொடர்புடையதா என்பது குறித்து அவரது தரப்பு இன்னும் விசாரித்து வருகிறது.

கடத்தல் விவகாரம் தொடர்பில் மூன்று ஆண்கள் உட்பட 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 365 மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 இன் பிரிவு 14 (A) இன் படி விசாரணை நடத்தப்பட்டது.

குழந்தைக்கு ஏதேனும் காயங்கள் உள்ளதா என்பதைக் கண்டறிய பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் குமார் கூறினார்.

குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017-ன் கீழ், அங்கீகரிக்கப்படாத மற்றும் அனுமதிக்கப்பட்ட தொடுதல் இருந்ததால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சந்தேக நபரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு கோருவதற்கு அழைப்பு வரவில்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles