200 குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு மோட்டார் சைக்கிள் வாங்க RM1,000 உதவி!

ஷா ஆலம், ஆக. 5- வருமானம் குறைந்த வர்கள் மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு முன்பணமாக தலா 1,000 ரிங்கிட் இருநூறு பேருக்கு வழங்கப் பட்டதாக மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்பு மாநில செயற்குழு உறுப்பினர் வி.பாப்பா ராய்டு தெரிவித்தார்.

BikeCare-1000 திட்டத்தின் கீழ் RM200,000 ஒதுக்கீடு குறைந்த வருமானம் பெறும் குழுவின் சுமையைக் குறைக்கும் நோக்கம் கொண்டத இதனால் உணவு வழங்கும் சேவையில் ஈடுபடுபவர்கள் மோட்டார் சைக்கிள்களை வாங்கலாம்.“மாநில அரசு RM1,000 தேவையுள்ள வசதி குறைந்தவர்களுக்கு முன்பணத்தை வழங்கி உதவுகிறது.

மோட்டார் சைக்கிள்கள் வாங்க எஞ்சியுள்ள செலவை உதவி பெறுநர்கள் ஏற்க வேண்டும்.இந்த முயற்சியால் அவர்களின் நிதிச் சுமையை ஓரளவு குறைக்க முடியும் என்று நம்பப்படுகிறது.

“குறைந்த வருமானம் பெறுபவர்கள் அவர்கள் வாழ்வாதாரத்தை மேம் படுத்தவும், சம்பாதித்து அவர்களின் குடும்பத்தின் பொருளாதார ஸ்திரத்தன்மை உறுதிசெய்யவும் அவர்களுக்கு உதவ நாங்கள் விரும்புகிறோம், ”என்று நேற்று மாநில செயலகத்தில் மோட்டார் சைக்கிள்களை பெறுநர்களிடம் கையளிக்கப்பட்ட பின்னர் சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.

பந்திங் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கும் பாப்பா ராய்டு, தனது அலுவலகம் இந்த திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது, இதில் அதிகமான மக்கள் பயனடையலாம் என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles