
புத்ரா ஜெயா, ஆக 17-
அரசு ஊழியர்களுக்கான புதிய சம்பள விகிதம் 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது, இது நாட்டின் வரலாற்றில் இல்லாத உயர்வாகும்.
வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் இப்புதிய சம்பள சீரமைப்பு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்தார்.
பிரதமரால் அறிவிக்கப்பட்ட பொது சேவை ஊதிய அறிவிப்பை (SSPA) வரவேற்கிறேன் என்று மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் இன்று அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
அந்தந்த நிறுவனங்களின் தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் மற்றும் பங்களிப்பைப் பாராட்ட, தொழிலாளர்களின் ஊதியத்தை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பின்பற்றுமாறு தனியார் துறைக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்.
குறிப்பாக SME துறையில் பணியாளர்களின் வருமானத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட தற்போதைய முற்போக்கான ஊதிய முன்னோடி திட்டத்தில் பங்கேற்க நிறுவனங்களும் ஊக்குவிக்கப்படுகின்றன.
இந்த திட்டத்தின் மூலம், பங்குபெறும் நிறுவனங்களுக்கு, நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஒரு ஊழியருக்கு மாதம் ஒன்றுக்கு RM300 வரை மானியத்தை அரசாங்கம் வழங்கும்.
புதிய குறைந்தபட்ச ஊதிய விகிதத்துடன் தேசிய ஊதிய ஆலோசனைக் குழுவின் பரிந்துரையையும் பெற்றுள்ளது.
மேலும் இப்போது அமைச்சரவையின் ஒப்புதலுக்கான பத்திரத்தை தயாரிக்கும் கட்டத்தில் உள்ளது என்று அவர் சொன்னார்.

