



காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் செப் 6-
மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு கடுமையான போட்டி நிலவுகிறது.
தமிழ் மலர் நிருபர் இரா கோபி, நம்பிக்கை இணையதளத்தின் தலைமை செயல் முறை அதிகாரி தயாளன் சண்முகம், மூத்த பத்திரிகையாளர் மற்றும் தினந்தந்தி இணையதளத்தின் ஆசிரியர் செ.வே.முத்தமிமன்னன் ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள்.
துணை தலைவர் பதவியை தற்காத்துக் கொள்ள நம்பிக்கை இணையத்தளத்தின் மூத்த பத்திரிகையாளர் பார்த்திபன் நாகராஜன் மீண்டும் போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து தமிழ் லென்ஸ் இணையத் தள நிருபர்
காளிதாசன் தியாகராஜன் போட்டியிடுகிறார். இவர் சங்கத்தின் முன்னாள் செயலாளர் ஆவார்.
3 உதவி தலைவர் பதவிக்கு இம்முறை ஐந்து பேர் போட்டியிடுகிறார்கள்.
தமிழ் மலர் நிருபர்
எம் ரவி, அனேகன் ஊடக நிருபர்
தரவின் குமார், மக்கள் ஓசை நிருபர்
செ.வெங்கடேஷ், தமிழ் லென்ஸ் நிருபர்
காளிதாசன் இளங்கோவன் மற்றும் மலேசிய நண்பன் நிருபர்
எஸ். ஜீவராஜா ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
செயலாளர் பதவிக்கு தமிழ் லென்ஸ் ஆசிரியர்
வெற்றி விக்டர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
துணைச் செயலாளர் பதவிக்கு மலேசிய நண்பன் நிருபர்
ஆர் குணா போட்டியின்றி தேர்வு பெற்றார்.
பொருளாளர் பதவிக்கு பெர்னாமா நிருபர்
சி. கிரிஸ்ட் போட்டியின்றி வெற்றி பெற்றார்.
சங்கத்தின் பத்து பேர் கொண்ட ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பதவிக்கு 9 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
1.யோகேஸ்வரன் (மக்கள் ஓசை)
2.மூர்த்தி ( ஆர்டிஎம்)
3.ராமன் குட்டி (மக்கள் ஓசை)
4.கிருஷ்ணன் ( தமிழ் நேசன்)
5.மா.பவளச்செல்வன் ( தினத்தந்தி நிருபர்)
6.காளிதாஸ் சுப்ரமணியம் ( தினத்தந்தி நிருபர்)
7.அமுதா லட்சுமணன் (மலேசிய நண்பன்)
8.விஜய லட்சுமி( மலேசிய நண்பன்)
9.சுந்தரேசன் முனுசாமி (மக்கள் ஓசை) ஆகியோர் மனுத் தாக்கல் செய்தனர்
தேர்தல் அதிகாரிகளாக
திரு .ஆர்.கிருஷ்ண மூர்த்தி
தி.சுந்தரராவ் ஆகியோர் செயல் பட்டனர்
வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி குயில் ஜெயபக்தி மண்டபத்தில் காலை பத்து மணிக்கு மேல் ஆண்டு கூட்டமும் தேர்தலும் நடைபெறுகிறது.
சந்தா பணத்தை செலுத்திய 147 பேர் இந்த தேர்தலில் வாக்களிக்கும் தகுதியை பெற்றிருக்கிறார்கள்.
வேட்புமனுவை
மீட்டுக்கொள்ள
11.9.2024 தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று சங்கத்தின் செயலாளர் வெற்றி விக்டர் தெரிவித்தார்.