
சின்டோக், அக். 5- விஸ்மா ட்ரான்சிட் கோலாலம்பூரில் பல பாலஸ்தீனர்களுக்கும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கும் இடையே சமீபத்தில் நடந்த மோதலை சாக்காகப் பயன்படுத்தி அவர்களை வீட்டுக்கு அனுப்ப முடியாது.
உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறுகையில் தங்கள் நாடு போரில் சிக்கியுள்ளதால், அரசாங்கம் அவ்வாறு செய்வதில் அர்த்தமில்லை என்றார்.
மலேசியர்கள் இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு முடிவு எடுக்க வேண்டாம் அல்லது பொதுவாக பாலஸ்தீனியர்களைக் குற்றம் சாட்ட வேண்டாம் என்று வலியுறுத்தினார்.
.முக்கியமானது என்னவென்றால், தற்போதுள்ள சில விதிகளை அவற்றின் அர்த்தப்படி எங்கே எவ்வாறு எப்படி செயல் படுத்தலாம் என்பதற்கான தீர்வுகளை நாங்கள் தேடுகிறோம்.
“உள்துறை அமைச்சகம் ஒத்துழைக்கத் தயாராக உள்ளது, அது தொடர்பான நடவடிக்கைகள் (அவர்கள் நாட்டில் இருக்க வேண்டும்) எங்கள் அதிகார வரம்பிற்கு உட்பட்டது.
அவர்கள் இங்கு வருவதற்கு ஏற்ற பாஸ் வகையைப் பொறுத்தது,” என்று அவர் இன்று இங்குள்ள யுனிவர்சிட்டி உத்தாரா மலேசியாவில் உள்ள டவுன் ஹாலில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
காயமடைந்த பாலஸ்தீனியர்களை, குறிப்பாக குழந்தைகளை மலேசியாவிற்கு அழைத்து வருவதற்கான அரசாங்கத்தின் முடிவு மனிதாபிமான அர்ப்பணிப்பு என்று அவர் கூறினார்,
அவர்களில் சிலர் பாதுகாப்பு மையத்தில் இருப்பது மற்றும் அவர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதில் அதிருப்தி அடைந்ததால் சமீபத்திய மோதல் ஏற்பட்டது என்று குறிப்பிட்டார்.
பெர்னாமா

