
புத்ரா ஜெயா, அக் 8-
கடந்த 14 வருடங்களுக்கு முன் நாட்டின் பிரபல பெண் தொழிலதிபர் டத்தோ சுசிலாவாத்தி லாவியா மற்றும் அவரின் மூன்று உதவியாளரையும் கொலை செய்த விவகாரம் தொடர்பாக இரு குற்றவாளிக்கு எதிரான மரண தண்டனை நிலை நிறுத்தப்படுவதாக புத்ராஜெயா கூட்டரசு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.
மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்குத் தலைமையேற்ற நாட்டின் தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் இந்த கொலை வழக்கு காரணமாக சம்பந்தப்பட்ட இரு ஆடவர்களான N..பத்மநாபன், T..திள்ளையழகன் ஆகியோர் மீதான மரண தண்டனை நிலைநிறுத்தப்படுகிறது என்று கூறினார்.
கொலைக்கான காரணங்கள் மற்றும் தரவுகள் யாவும் முழுமையாக ஆராயப்பட்டுள்ளது.
இதனால் தங்களுக்கு எதிராக வழங்கப்பட்ட மரண தண்டனையை நீதித்துறை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று செய்து கொண்ட விண்ணப்பத்தை கூட்டரசு நீதிமன்றம் நிராகரிப்பதாக அவர் சொன்னார்.