
கோலாலம்பூர், அக். 31- மலேசிய இரட்டையர் பூப்பந்து வீராங்கனையான
எம்.தீனா, ஏழாண்டுகளுக்குப் பிறகு தன் குடும்பத்தினருடன் தீபாவளியைக்
கொண்டாடுவதற்குரிய அரிய வாய்ப்பினை இம்முறைப் பெற்றுள்ளார்.
தற்போது கிள்ளானில் வசித்து வரும் 26 வயதான தீனா,
குடும்பத்தினருடன் தீபாவளியைக் கொண்டாடுவதற்கு கிடைத்த இந்த
சந்தர்ப்பத்தை ஒரு பொன்னான வாய்ப்பாக கருதுகிறார்.
இதற்கு முன்னர் தீபாவளி பெருநாளின் போதெல்லாம் அனைத்துலக
விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதற்காக நான் குடும்பத்தினரைப்
பிரிந்து வெளிநாடுகளில் இருந்தேன்.
ஆனால், இம்முறை தீபாவளி கொண்டாட்டம் பொருத்தமான தேதியில்
வருவதால் இது எனக்கு தனித்துவமிக்க திருநாளாக விளங்குகிறது என்று அவர் சொன்னார்.

