
மலேசியாவின் 10 ஆவது பிரதமராக பதவி ஏற்றுள்ள
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு தமிழக மக்கள் சார்பாக எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் கலாச்சாரம், வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவற்றில் மலேசியாவுடன் ஒத்துழைப்பை மேம்படுத்த எதிர்பார்க்கிறோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே டத்தோஸ்ரீ அன்வாருக்கு உலகத் தலைவர்களிடம் இருந்து தொடர்ந்து வாழ்த்துக்கள் கிடைத்த வண்ணம் உள்ளன.
இதன் மூலம் மலேசியாவில் முதலீடு செய்வதற்கு பல நாடுகள் தயார் நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

