விவாகரத்து விவகாரம் தொடர்பாக நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா வழக்கில் 27ம் தேதி தீர்ப்பு!

சென்னை: நவ 22-
நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவகாரத்து கோரிய வழக்கில் இருவரும் குடும்பநல நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார்கள்.

விவாகரத்து வழக்கில் வரும் 27ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று குடும்பநல நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குனர் கஸ்தூரிராஜா இளைய மகன் நடிகர் தனுஷுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சுமார் 18 ஆண்டுகள் திருமண வாழ்வுக்குப் பின்னர், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles