மலேசியாவிற்கு அதிக அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்க தென் கொரிய முதலீட்டு சபையுடன் பிரதமர் சந்திப்பு!

சியோல், நவ 26: மலேசியாவிற்கு அதிக அந்நிய நேரடி முதலீட்டை (FDI) ஈர்ப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக தென் கொரிய நிறுவனங்களின் முன்னணி நபரான ‘chaebol’ இன் பிரதிநிதிகளுடன் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று ஒரு சந்திப்பை நடத்தினார்.

மேலும், சாம்சங் குரூப், எஸ்கே நெக்சிலிஸ், போஸ்கோ குரூப் மற்றும் லோட்டே இன்டர்நேஷனல் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களுடன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த சந்திப்பை நடத்தினார்.

கொரிய குடியரசில் இருந்து முதலீட்டைப் பெறுவதற்கான மலேசியாவின் உத்திக்கு இணங்க இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

Chaebol (கார்ப்பரேட் பிரமுகர்கள்) குடும்பத்திற்கு சொந்தமான கூட்டு நிறுவனங்கள், பாரம்பரியமாக தென் கொரிய அரசாங்கத்துடன் நெருங்கிய உறவு கொண்டுள்ளது.

கொரியப் போருக்கு பிறகு, நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, அந்த நிறுவனத்திற்கு அரசாங்கத்தின் ஆதரவு கிடைக்க தொடங்கியது.

– பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles