


சுங்கை பூலோ, ஜூலை 5-
கிள்ளான் வேலி கால்பந்து கிளப் ஏற்பாட்டில் பியாலா மடானி கிண்ண கால்பந்து போட்டி மிகப்பெரிய அளவில் சுங்கை பூலோ மெல்வூட் அரங்கில் நடைபெற்றது.
இந்த போட்டியில் மெல்வூட், கின்ராரா, ராசா எப்சி, டிஎன்பி சுங்கை பூலோ, ரவாங் உட்பட பத்து கிளப்புகள் பங்கேற்றன.
காலையில் இந்த போட்டியை சிலாங்கூர் மாநில மஇகா செயலாளர் சசிதரன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து ஆதரவு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த போட்டியில் 16 வயதுக்கு உட்பட்ட பிரிவில் நான்கு குழுக்கள் கலந்து கொண்டன.
இந்த பிரிவில் வெற்றி பெற்ற குழுக்களுக்கு சசிதரன் பரிசுகளை எடுத்து வழங்கி பாராட்டினார்.
போட்டியை சிறப்பாக நடத்திய கிள்ளான் வேலி கால்பந்து கிளப் தலைவர் நாகராஜன், ரவீந்திரன் ஆகியோருக்கு சசிதரன் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.

