
வரும் டிசம்பர் 19,20 ஆம் தேதி சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சபாநாயகர் பதவியை டான்ஸ்ரீ Azhar azizan harun திடீரென ராஜினாமா செய்து விட்டார் என்று gemilang daily பரபரப்பான செய்தியை வெளியிட்டுள்ளது..
சபாநாயகர் பதவி விலகி விட்டதாக கூறப்படும் செய்தி சமூக வலைத்தளங்களில் காட்டு தீயை போல் பரவிக் கொண்டிருக்கிறது.
இதுபற்றி கருத்துரைத்த டான்ஸ்ரீ அஸாஹர் நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னர் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்வது உறுதி என்றார்.
எனக்கு பதில் நாடாளுமன்ற கூட்டத்தை மக்களவை செயலாளர் வழிநடத்துவார்.
அப்போது புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்படலாம் என்று அவர் சொன்னார்.

