
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த அமைச்சரவை பட்டியலை பார்க்கும் போது வினோதமான கூட்டாளிகளுடன்” பணியாற்ற வேண்டியிருப்பதால் அவரது கைகள் கட்டப்பட்டிருக்கலாம் என்று ஊழல் எதிர்ப்பு ஆர்வலர் எட்மண்ட் டெரன்ஸ் கோம்ஸ் சுட்டிக் காட்டினார்.
அன்வார் நீண்ட காலமாக வாதிட்டு வந்த நல்லாட்சி மற்றும் சமநிலையின் தேவை ஆகியவற்றின் பார்வையில், பிரதமரும் நிதி அமைச்சராக இருப்பது பொருத்தமற்றது
என்று அவர் சுட்டி காட்டினார்.
ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பதில் பல கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு அன்வார் தள்ளப்பட்டுள்ளார் என்று அவர் சுட்டி காட்டினார்.

