
புதிய அமைச்சரவை பட்டியலை அறிவித்தபோது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மனித வள அமைச்சர் சிவகுமார் பெயரை சொல்லவில்லை.
இந்த சம்பவம் தொடர்பில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிவகுமாரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டதாக மலேசியா கினி இணையத் தளம் மேற்கோள் காட்டி செய்தியை வெளியிட்டுள்ளது.
அமைச்சரவையில் சிவகுமார் இடம் பெற்றிருந்த போதிலும் பெயர் அறிவிக்கும் போது அவர் பெயர் விடுபட்டது பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

