

கோலாலம்பூர், ஜன 3-
சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவராக டாக்டர் சுரேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2025 ஜனவரி 1 ஆம் தேதி முதல் இவரின் பதவி நியமனம் நடப்புக்கு வருகிறது.
சிலாங்கூர் மாநில பிபிபி தலைவராக டாக்டர் சுரேந்திரனை நியமனம் செய்த பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலாவுக்கு சிலாங்கூர் மாநில பிபிபி தொகுதி தலைவர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
இதனிடையே தம் மீது நம்பிக்கை வைத்து சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் பதவியை வழங்கிய கட்சி தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா மற்றும் கட்சிக்கு பக்கப்பலமாக இருப்பேன் என்று டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.

