
கடந்த 2020 ஆம் ஆண்டு எஸ். உதயகுமார் என்பவர் முகநூலில் பதிவேற்றம் செய்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவருக்கு எதிராக பினாங்கு பாகான் டாலம் சட்டமன்ற உறுப்பினர் சதீஷ் முனியாண்டி பட்டர்வெர்த் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மானநஷ்ட ஈடு வழக்குத் தொடுத்தார்.
அது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் என்பதால் சதீஷ் முனியாண்டி பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியதற்காக அவருக்கு 65,000 வெள்ளி இழப்பீடாக வழங்கும் படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பணத்திற்காக இந்த வழக்கை தொடுக்க வில்லை.
மாறாக அறதூறுகளை அள்ளி வீசும் தரப்புக்கு இது ஒரு நல்ல பாடமாக அமையும் என்று சதீஷ் முனியாண்டி தெரிவித்தார்.

