
பெரிக்கத்தான் நேஷனல் ஆட்சியில் 60,000 கோடி வெள்ளி முறைகேடு தொடர்பாக அப்போதைய பிரதமராக இருந்த டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு எதிராக விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது என்று எம்ஏசிசி தலைவர் அஸாம் பாக்கி உறுதி படுத்தி இருப்பதாக இன்ஃபோ ராக்யாட் இணையத்தளம் செய்தியை வெளியிட்டுள்ளது.
இது பற்றி மேல் விவரங்கள் வெளியிட அவர் மறுத்து விட்டார்
இந்த 60,000 கோடி வெள்ளி விவகாரம் தொடர்பில்
எனக்கு சவால் விடுக்க வேண்டாம் என்று டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த 60,000 கோடி தொகையில் பெரும் பணம் இ.பி.எப். பணமாகும்.
இது மக்களின் பணம் என்பதை மறந்து விடாதீர்கள் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சுட்டிக காட்டி உள்ளார்

