
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அமைச்சரவையில் 28 இடங்களில் நான்கு மட்டுமே வழங்கப்பட்டதால் ஜசெக, கட்சி ஆதரவாளர்களின் அதிருப்தியைச் சமாளிக்கும் பொறுப்பை தாம் சுமப்பதாக ஜசெக பொதுச் செயலாளர் அந்தோணி லோக் கூறினார்.
கடந்த 15ஆவது பொதுத் தேர்தலில் ஜசெக 40 இடங்களைப் பெற்ற போதிலும் வெறும் 4 அமைச்சர்கள்.இது கட்சி வட்டாரத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
உண்மையில், கபுங்கன் பார்ட்டி சரவாக்கின் ஜிபிஎஸ் ஆதரவைப் பெறுவதில் ஜசெக முக்கியப் பங்காற்றியது,
சரவாக் முதல்வரிடம் மன்னிப்பு கேட்கப்பட்டதால் அந்த கட்சி பக்கத்தான் ஹரப்பா யுடன் இணைந்தது. என்பது குறிப்பிடத்தக்கது.

