
சென்னை ஜன 21-
இசை என்பதற்கு அடிமையாகாதவர்கள் யாரும் இல்லை.
இதற்கு ஏற்றதை போல சரிகமப நிகழ்ச்சி தற்போது மக்கள் மனதில் ஒரு தீராத இடத்தை பிடித்து வைத்துள்ளது.
தற்போது சரிகமப லிட்டில் சாம்ஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.
இதில் தெரிவு செய்யப்பட்ட போட்டியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் சிறப்பான போட்டியை வெளிக்காட்டி வருகின்றனர்.
இதில் ரசிகர்களுக்கு மிகவும் பிரியமான போட்டியாளராக இருப்பவர் தான் திவினேஷ்.
இவர் தனது தாத்தாவின் வளர்பால் அவர் பாடிய பாடல்களை உணர்ச்சி தழும்பாமல் பாடி ரசிகர்களை நடுவர்களை கவர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் பல சுற்றுக்களை கடந்து வந்து தற்போது திருமண பாடல் சுற்றில் ‘உன்னை நினைத்தேன் பாட்டு படித்தேன் தங்கமே ஞான தங்கமே’ பாடலை பாடியுள்ளார்.
இதற்கு நடுவர்கள் பாராட்டுக்களை குவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

