

நாட்டில் தலைசிறந்த சமய சொற்பொழிவாளராக விளங்கிக் கொண்டிருக்கும் சுவாமி மகேந்திரர் தலைமையில் கடந்த நான்கு தினங்களாக அம்பாங்கில் உள்ள ஸ்ரீ ஆதி சங்கரர் திருமடத்தில் சமயப் பயிற்சி வகுப்பு மிகவும் விமரிசையாக நடைபெற்றது வருகிறது.
நாடு தழுவிய அளவில் இந்த பயிற்சி வகுப்பில் 135 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ஸ்ரீ ஆதி சங்கரர் திருமடத்தின் ஸ்தாபகராக விளங்கும் மகேந்திரர் சுவாமி எளிய முறையில் ஆற்றும் சமய சொற்பொழிவுகள் மாணவர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

