2025 தைப்பூசத்தில் உணவை வீணாக்காதீர்கள்! பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மற்றும் பினாங்கு இந்து சங்க பேரவை வேண்டுகோள்

பிறை பிப் 7-
பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மற்றும் பினாங்கு மாநில இந்து சங்க பேரவை ஆகியவை தைப்பூச பக்தர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் வழங்கப்படும் உணவை வீணாக்காமலும், நெகிழியை பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன.

இலவச உணவு மற்றும் பானங்களை வழங்கும் தண்ணீர் பந்தல்களை நடத்தும் அமைப்புகள் தைப்பூசத்தின் போது நெகிழி அல்லது பாலிஸ்டிரீன் என்ற நுரைப்ப தட்டுக்கள் மற்றும் கோப்பைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

மாறாக, காகிதத் தட்டுகள் மற்றும் கோப்பைகளைப் பயன்படுத்தும் படி இந்த அமைப்புகள் அறைகூவல் விடுத்துள்ளன.
இவை மிகவும் பாதுகாப்பானது.

சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்காத வகையில் உள்ள மறுசுழற்சி தட்டுக்களை பயன்படுத்த வேண்டும்.

உணவை வழங்குவதற்கு பாதுகாப்பான மற்றும் சிறந்த வழிகள் உள்ளன.

காகிதத் தட்டுகள் மற்றும் காகிதக் கோப்பைகள், மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகள் மற்றும் இலைகளால் செய்யப்பட்ட தட்டுகள் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

ஆனால், நாடு முழுவதும் தைப்பூசம் கொண்டாடப்படும் இடங்களில் நெகிழி தட்டுகள்,கரண்டிகள் மற்றும் குவளைகள் மிக அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

பக்தர்கள் மற்றும் தைப்பூசத்திற்கு வருவோர் நெகிழி வழியாக வழங்கப்படும் உணவை தொடக்கூடாது.

நெகிழி சிதைவதற்கு பல ஆண்டுகள் பிடிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் மற்றும் அதன் காலம் பொருள் அமைந்துள்ள இடத்தைப் பொறுத்தது.

இந்த பொருள் சிதைவது கடினமாக இருக்கும்போது ​​​​சுற்றுச்சூழலுக்கும் சுமையாக இருக்கும்.

மேலும் நெகிழியின் எண்ணிக்கை அதிகரித்தால் அது மண்ணுக்கும் சுற்றுச்சூழலுக்கும் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

அதிகமான மக்கள் நெகிழியை பயன்படுத்தினால் நெகிழி மாசு பிரச்சினை, ஆரோக்கியமற்றதாக அமையும்.

சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க பக்தர்கள் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பயன்பாட்டை குறைக்க வேண்டும்.

நெகிழி பொருட்களின் பயன்பாடு அமைதியான அச்சுறுத்தல் என்பதே உண்மை.

இதன் விளைவாக, நெகிழி மனிதர்களுக்கு ஒரு மௌன எதிரி என்பதை பலர் உணரவில்லை.

சில தண்ணீர் பந்தல்கள் துருப்பிடிக்காத வெண்கல கோப்பைகளில் பானங்களை பரிமாறுகின்றன.

நெகிழி மற்றும் பாலிஸ்டிரீன் உணவு தட்டுக்கள் மற்றும் கப்களின் பயன்பாட்டை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்த விரும்புகின்றோம்

தைப்பூசத்தின் போது, ​​தொண்டு நிறுவனங்கள் இலவச உணவு வழங்குகின்றன, அவர்களில் பெரும்பாலோர் நெகிழி மற்றும் பாலிஸ்டிரீன் கொள்கலன்களைப் பயன்படுத்துகிறார்கள்.

இந்த கொள்கலன்கள், கரண்டிகள் மற்றும் கோப்பைகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது.

உணவு விரயம் செய்வதை அரசு சாரா நிறுவனங்கள் சீர் தூக்கி கவனிக்க வேண்டும் என்றும் வலியுறுத்த விரும்புகின்றோம்.

தைப்பூசத்தின் போது ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 50 டன் உணவுகள் வீசப்படுவதாக மதிப்பிடுகிறது.

உணவு பரிமாறுபவர்கள் தங்கள் பரிமாறும் அளவைக் குறைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அவர்கள் அன்னதானம் (இலவச உணவு) வழங்குகிறார்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், ஆனால் பக்தர்களுக்கு உணவுத் தட்டுப்பாடு இருக்காது, எனவே அவர்கள் அளவை குறைத்து ஒரு நபருக்கு ஒன்று மட்டுமே தர வேண்டும்.

தைப்பூசத்தைக் கொண்டாடும் மலேசியாவில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்களுக்கு உணவு பரிமாறும் போது நெகிழி மற்றும் பாலிஸ்டிரீன் உணவுப் பாத்திரங்களைத் தவிர்க்குமாறு ஆலய நிர்வாகத்தை கேடுகொள்கிறோம்.

சுற்றுச்சூழலைக் காக்க இந்த விழாவை களமாகப் பயன்படுத்துவோம்.

இது நமது குழந்தைகளுக்கு தூய்மையான மற்றும் பாதுகாப்பான பூமியை விட்டுச் செல்லும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மற்றும் பினாங்கு இந்து சங்க பேரவை கேட்டுக்கொள்கிறது.

என். வி.சுப்பாராவ்
கல்வி அதிகாரி
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

விவேக ரத்னா ஏ.தர்மன் தலைவர்
பினாங்கு மாநில இந்து சங்கம பேரவை

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles