

பினாங்கு பிப் 11-
தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கு கொண்டாப்படும் தைப்பூசத்தை முன்னிட்டு பினாங்கு பால தண்டாயுதபாணி ஆலயத்தில் லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இவ்வாண்டும் பினாங்கு தைப்பூசத்தை முன்னிட்டு லோட்டஸ் குழுமத்தின் சார்பில்
இரு தினங்களாக மூன்று வேளை உணவு மற்றும் குளிர்பானங்கள் தண்ணீர் பலகாரங்கள் ஆகியவை தைப்பூசம் திருவிழாவில் கலந்து கொண்ட ஆயிரக் கணக்கான பக்தர்களுக்கு. லோட்டஸ் நிறுவனங்களின் தலைவர் டான்ஶ்ரீ ரெனா துரைசிங்கம் பிள்ளை, டத்தோ ரெனா ராமலிங்கம் பிள்ளை, டத்தோ ரெனா நாக சுந்தரம் பிள்ளை ஆகியோர் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

