
பிறை பிப் 12-
பினாங்கு மாநிலத்தில் இரு தினங்களாக தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கு தைப்பூசம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
லட்சக்கணக்கான பக்தர்கள் பினாங்கு தைப்பூசத்தில் கலந்து சிறப்பித்தனர்.
மூத்த அரசியல்வாதி டான்ஸ்ரீ லிம் கிட் சியாங், பினாங்கு மாநில முதல்வர் சாவ், டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, புக்கிட் குளுக்கோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்ப்பால் சிங், ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ராயர், மனிதவள அமைச்சர் ஸ்டிவன் சிம், பினாங்கு மாநில ஆட்சி குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ ராஜூ, செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் மற்றும் பினாங்கு இந்தியர் கால்பந்து கிளப் தலைவர் ஸ்ரீ சங்கர் ,பாகன் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங், பத்து ஊபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
பினாங்கு மாநில இந்து அறநிலையத்துறை சார்பில் இம்முறை தைப்பூசம் விமரிசையாக கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

