
கிள்ளான் ஆற்றில் காணப்பட்ட முதலையை தேடும் பணியில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கோலாலம்பூர் பொது பாதுகாப்புப் படை அதிகாரி மேஜர் அஹ்மட் ஜுனைட் டுகுட் சுஹார்டோ அஹ்மத் தெரிவித்ததாவது, “ஆற்றின் நீரோட்டம் மிகுந்திருப்பதால், முதலையை பிடிக்கும் முயற்சிகள் சிரமத்துக்கு உள்ளாகின்றன.”
கனமழை தொடரும் நிலையில், ஆற்றின் நீரோட்டம் வலுவாக இருப்பதால் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்த முடியவில்லை. காவல்துறை, வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா துறை இணைந்து இரவு 11 மணிக்கு சிறப்பு உபகரணங்களை தயாரித்தனர்.
ஆனால் இதுவரை முதலையை கண்டுபிடிக்க முடியவில்லை, எனினும் தேடுதல் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

