
சென்னை, தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா, சினிமாவில் 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை ராஜாவாக திகழ்ந்து வருகிறார்.
இசைக்கு அவர் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில் பல்வேறு விருதுகளை அளித்த மத்திய அரசு மாநிலங்களவை உறுப்பினராகவும் அவரை நியமனம் செய்துள்ளது.
இதற்கிடையே தான் நீண்ட நாட்களாக சிம்பொனி எழுதி வருவதாகவும், விரைவில் லண்டனில் அதை அரங்கேற்றுவேன் என்றும் இளையராஜா அறிவித்திருந்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின்,
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் நேரடியாக சென்று அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர்.
சந்தித்துசொன்னது போலவே லண்டனில் உள்ள உலக புகழ்பெற்ற ஈவண்டின் அப்பல்லோ அரங்கத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு தனது சிம்பொனியை இளையராஜா அரங்கேற்றினார்.
பீத்தோவான் உள்ளிட்ட உலக புகழ்பெற்ற இசை மேதைகள் இசையமைத்த இந்த அரங்கில் தமிழரான இளையராஜா சிம்பொனி அரங்கேற்றம் செய்ததை உலகமே ஆர்வத்துடன் உற்று நோக்கியது
அந்தவகையில் 35 நாட்களில் சிம்பொனி எழுதி, அதனை லண்டனில் அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற சாதனையை இளையராஜா படைத்துள்ளார்