
சபாவில் உள்ள பூர்வீக நீதிமன்றங்கள் குழந்தைத் திருமண விண்ணப்பங்கள் தொடர்பான வழக்குகளை 18 வயதாக அரசு உயர்த்தியவுடன், அவற்றைக் கையாளத் தயாராக இருக்க வேண்டும் என்று சபா கெப்பாயான் ஜசெக சட்டமன்ற உறுப்பினர் ஜெனி கேட்டுக் கொண்டுள்ளார்.
தற்சமயம் மரபுச் சட்டங்களின்படி திருமணம் செய்துகொள்ள வயது வரம்பு இல்லை என்றும், சொந்த நீதிமன்றங்களில் மாவட்ட மற்றும் பூர்வீக தலைவர்களின் அனுமதியுடன் குழந்தைத் திருமணத்தை இன்னும் செய்யலாம் என்றும் அவர் சொன்னார்.
குழந்தை திருமணங்களில் அதிக விவாகரத்து விகிதம் இருப்பதாக பூர்வீக தலைவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்,
அதே நேரத்தில் திருமணமான வயதுக்குட்பட்ட பெண்கள் கர்ப்பமாகி அடிக்கடி மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்று அவர் கூறினார்.

