

இந்நாட்டில் இந்திய சமுதாயத்திற்கு அனைத்து விதமான உதவிகளை அரசாங்கம் செய்யும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
60 ஆண்டுகள் ஆகியும் மலாய்க்காரர்களின் சிறப்பு உரிமைகள் காக்கும் முயற்சிகள் இருந்தாலும் மற்ற இனத்தவர்களுக்கும் அரசு உதவி புரியும்.
இந்தியர்கள், பூர்விக குடியினர் இன்னமும் ஏழைகளாக இருப்பது வேதனை அளிக்கிறது.
இந்தியர்களின் நலன்கள் காக்க அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என்று நேற்று நாடாளுமன்றத்தில் பேசும் போது அவர் இதனை தெரிவித்தார்.
நடந்து முடிந்த தேர்தலில் பக்கத்தான் ஹரப்பானுக்கு இந்தியர்கள் 85 விழுக்காடு ஆதரவு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

