குடியுரிமை விண்ணப்பங்களை விரைவு படுத்துவதில்  ஈடுபட்ட மூன்று நபர்  சிண்டிகேட் தடுத்து வைப்பு

அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த ஒரு சிண்டிகேட்டை மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய (எம்ஏசிசி) அதிகாரிகள் கைது செய்தனர். அதில் இரண்டு நிறுவன உரிமையாளர்கள் மற்றும் ஒரு எழுத்தர் ஈடுப்பட்டதாக அறியப்படுகிறது.

ஆதாரங்களின்படி, 20 முதல் 30 வயதுக்குட்பட்ட ஆண்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை இங்குள்ள எஸ். பி. ஆர். எம் தலைமையகத்தில் அறிக்கைகளை வழங்கிக் கொண்டிருந்தபோது அதிகாலை 1 மணி முதல் பிற்பகல் 1:30 மணி வரை தடுத்து வைக்கப்பட்டனர்.

வெளிநாட்டு விண்ணப்பதாரர்களுக்கு மலேசிய குடியுரிமை பெறுவதற்கான செயல் முறையை விரைவுபடுத்துவதற்காக அரசாங்கத் துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த ஒரு சிண்டிகேட்டில் அவர்கள் அனைவரும் ஈடுபட்டதாக சந்தேகிக்கப் படுகிறது.

“ஓப் ஃபாஸ்ட்லேன் மூலம் மூன்று சந்தேக நபர்களை கைது செய்வது மார்ச் 11 அன்று நடத்தப்பட்ட ஓப் அவுட்லேண்டரின் தொடர்ச்சியாகும், இதில் குடியுரிமை விண்ணப்ப செயல் முறையை விரைவுபடுத்த அரசாங்கத் துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க  ஒரு சிண்டிகேட் ஈடுபட்டதாக  அறியப்பட்டது”.

“ஒரே விண்ணப்பத்திற்காக அவர்கள் RM5,000 முதல் RM150,000 வரை லஞ்சம் கொடுத்ததாக நம்பப்படுகிறது” என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

அவர்கள் அனைவரும் இப்போது மேலதிக விசாரணைக்காக இந்த வியாழக்கிழமை வரை காவலில் வைக்கப் பட்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles