பலூன் வியாபாரி தாக்கப்பட்ட சம்பவம்!3 டிபிகேஎல் அமலாக்க அதிகாரிகளுக்கு தற்காலிக ஓய்வு!

கோலாலம்பூர் மார்ச் 30-
பலூன் வியாபாரி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக
டிபிகேஎலை சேர்ந்த மூன்று (3) அமலாக்க அதிகாரிகளுக்கு தற்காலிகமாக ஓய்வு அளித்துள்ளது

ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானில் நடந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் உள் விசாரணைக்கு வழி வகுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று டத்தோ பண்டார் டத்தோஸ்ரீ மைமூனா தெரிவித்தார்.

DBKL மற்றும் ராயல் மலேசியன் காவல்துறையின் (PDRM) விசாரணை
எந்தவொரு குறுக்கீடும் இல்லாமல் சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

இந்த விவகாரம் தொடர்பில் அமைச்சருடனும் கலந்துரையாடப் பட்டது.

DBKL இந்த சம்பவத்தை தீவிரமாக எடுத்துக்கொள்கிறது மற்றும் சமரசம் செய்யாது என்று அவர் சொன்னார்..

அனைத்து விசாரணைக்குப் பிறகே எந்த முடிவும் எடுக்கப்படும்.

தற்போது சிகிச்சை பெற்று வரும் சகோதரர் முஹம்மது ஜைமுதீன் பின் அஸ்லான்
மருத்துவமனை யின் செலவையும் டிபிகேஎல் ஏற்கும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles