
பூச்சோங் ஏப் 7-
புத்ரா ஹைட்ஸ் பகுதியில் நூற்றுக்கணக்கானோரை பாதித்த எரிவாயு குழாய் தீ விபத்தைத் தொடர்ந்து, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 118 நபர்களிடமிருந்து போலீசார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
நேற்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் உமர் கான், நேர்காணல் செய்யப்பட்டவர்களில் குத்தகை யார்கள், முக்கிய ஒப்பந்ததாரர்கள், துணை ஒப்பந்ததாரர்கள் மற்றும் தொழிலாளர்கள் அடங்குவர் என்று கூறினார்.
நேற்று நண்பகல் வரை காவல்துறைக்கு 642 புகார்கள் வந்துள்ளதாகவும், அவற்றில் ஒன்று மார்ச் 31 இரவு பட்டாசு வெடித்ததாகக் கூறப்படுவதாகவும் அவர் கூறினார்.

