
பொறுப்பற்ற மற்றும் சுயநல அரசியல்வாதிகளை நிராகரிக்கும் உரிமை இந்தியர்களுக்கு இருக்கிறது என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி தெரிவித்தார்.
துணை பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தனது இந்தியர் பிரிவு சிறப்பு அதிகாரியாக சர்ச்சைக்குரிய டத்தோ ரமேஷ் ராவ் நியமிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிற்கு எதிராக விஷத்தைக் கக்கிய இவருக்கு எதற்காக இந்த பதவி.
வெளிநாட்டு முதலீடுகள் நாட்டிற்குள் வருவதை அன்வார் தடுத்து நிறுத்துகிறார் என்று அப்பட்டமாக பொய் சொன்னவர் ரமேஷ் ராவ் ஆவார்.
அம்னோவின் ஆதரவாளரான இவரை புறக்கணிக்கும் எல்லா தகுதிகளும் இந்தியர்களுக்கு இருக்கிறது என்றார் அவர்.

