மைஸ்கில்ஸ் அறவாரியம் மேற்கொள்ளும் இளைஞர் உருமாற்ற திட்டங்களுக்கு துணை நிற்போம்! அமைச்சர் ஹன்னா இய….

களும்பாங், ஏப்ரல் 26-
மாணவர்களுக்கு தொழில் திறன் பயிற்சிகளை வழங்கி அவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மைஸ்கில் அறவாரியம் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள களும்பாங்கில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

மைஸ்கில்ஸ் அறவாரியத்தில் உலு சிலாங்கூர் இளைஞர்களுடன் ேட்மிண்டன் பயிற்சி பயிற்சி திட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சிக்குரியது என்று இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்தார்.

“மைஸ்கில்ஸ் அறவாரியத்தின் விளையாட்டாளர்களின் திறனை மேம்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில், பேட்மிண்டன் போட்டியில் முன்னாள் தேசிய வீரர் ஹாஜி ரோஸ்லின் கலந்து கொண்டஉ பயிற்சியை வழங்க முன்வந்திருப்பதும் பாராட்டிற்குரியது என்று அவர் சொன்னார்.

இளம் விளையாட்டாளர்களை ஊக்குவிக்கவும் அவர்களின் திறமையை வளர்க்கவும் ஆதரவு நல்கும் வகையில், டத்தோ வீரா லீ சோங் வெய் போட்டியாளர்கள் அனைவருக்கும் வழங்கிய பேட்மிண்டன் ரேக்கெட் இன்னும் அர்த்தமுள்ளதாக உள்ளது என்றார்.

கிராமப்புற இளைஞர்கள் தரமான பயிற்சியைப் பெறுவதற்கு, இது போன்ற முயற்சி, நிச்சயம் துணைபுரியும்.

இளைஞர்கள் விளையாட்டுத் துறையில் கொண்டுள்ள ஆர்வத்தை வளர்ப்பதிலும் முன்னெடுப்பதிலும் சிறந்த முறையில் பங்காற்றிவரும் ரோஸ்லின், மைஸ்கில்ஸ் அறக்கட்டளை பொறுப்பாளர்கள், டத்தோ வீரா லீ சோங் வெய் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இத்தகைய அர்ப்பணிப்பு உணர்வு பாராட்டுக்குரியது. இளம் வீரர்களுக்கு வழங்கப்பட்ட இந்த பேட்மிண்டன் ரேக்கெட் வெறும் உபகரணங்கள் மட்டுமல்ல. அவர்களின் திறமைக்கு அடையாளம் என்று குறிப்பிட்டார். இது போன்ற திட்டங்கள் நாடு முழுவதும் விரிவுபடுத்த அமைச்சர் தயாராக உள்ளது என்றார் அவர்.

மைஸ்கில்ஸ் அறவாரியத்தின் இயக்குனர் வழக்கறிஞர் சி.பசுபதி ஏற்பாட்டில் ஏப்ரல் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினர் பாங் சொக் தாவ், தேசிய இளைஞர் கூட்டுறவு நிறுவனத்தின்(KOBENA) தலைமை நிர்வாக அதிகாரி ஷாரிஸால் உட்பட அதிகமானோர் இதில் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles