இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சிகிச்சை செலவுகளை ஈடுகட்டும் வகையில் பிரதமரின் நன்கொடை !

கோலாலம்பூர், மே 3:பிறந்ததிலிருந்து இதய நோயால் அவதிப்பட்டு வரும் இரண்டு வயது குழந்தை அய்யாஷ் வசீம் முகமது ஃபுவாட்டின் சிகிச்சை செலவுகளைத் தணிக்க பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நன்கொடை வழங்கினார்.


பிரதமரின் அரசியல் செயலாளர் டத்தோ அஹ்மத் ஃபர்ஹான் ஃபவுஸி, பகாங்கின் குவாந்தானில் உள்ள இந்திரா மஹ்கோட்டா 2 இல் உள்ள குடும்பத்திற்கு விஜயம் செய்தபோது, குழந்தையின் தந்தை முகமது ஃபுவாட் அப்துல் மாலேக்கிடம்  அந்த நன்கொடையை வழங்கினார்.

இந்த விஷயத்தை இன்று பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்ட அஹ்மத் ஃபர்ஹான், குடும்பம் தாங்க வேண்டிய சோதனைகள் குறித்து பிரதமரின் அக்கறையின் அறிகுறியாக இந்த பங்களிப்பு உள்ளது என்றார்.

“இந்த சிறிய உதவி சுமையை குறைக்கவும், எதிர்காலத்தில் வரவிருக்கும் சுகாதார சவால்களை எதிர்கொள்வதில் இந்த குழந்தை தொடர்ந்து வலுவாக இருக்கட்டும்” என்று அவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

அஹ்மத் ஃபர்ஹான் கூறுகையில், முகமது ஃபுவாட் அய்யஷ் வசீமின் சிகிச்சை செலவுகளை ஈடுகட்ட டார்ச் இஞ்சியை பயிரிடுகிறார், இதில் ஒரு மாதத்திற்கு RM600 கிடைக்கிறது. அதில் இன்னும் பள்ளியில் இருக்கும் அவரது இரண்டு குழந்தைகளின் தேவைகளுக்கும் கவனிக்க வேண்டும்.

“சமீபத்தில் அய்யாஷ்விற்கு இதய அறுவை சிகிச்சை முடித்ததாகவும் எனக்குத் தெரிவிக்கப் பட்டது”. இந்த குழந்தைக்கு ஐந்து வயதாகும்போது மற்றொரு அறுவை சிகிச்சை திட்டமிடப் பட்டுள்ளது, “என்று குழந்தையின் தந்தை தெரிவித்ததாக கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles