Asian கிண்ண கால்பந்து போட்டியில்
சிங்கப்பூரை வீழ்த்தி
அரையிறுதிக்கு முன்னேறியது ஹரிமாவ் மலேசியா

புக்கிட் ஹாலில் தேசிய அரங்கில் நடைபெற்ற ஆசியான் கிண்ணக் கால்பந்து போட்டியில் ஹரிமாவ் மலேசியா குழு 4-1 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூரை எளிதில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

மலேசியாவின் முதல் கோலை 35 ஆவது நிமிடத்தில் டேரன் லுக் அடித்தார். பின்னர் 51,54 ஆவது நிமிடத்தில் மேலும் இரு கோல்களை ஸ்டிவெர்ட் அடித்தார்.

4 ஆவது கோலை 88 ஆவது நிமிடத்தில் செர்ஜியோ அகோரோ போட்டார்.

கடுமையான போராட்டத்திற்கு பிறகு சிங்கப்பூர் 85 ஆவது நிமிடத்தில் ஒரு கோலை அடித்தது.

அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற ஹரிமாவ் மலேசியா வரும் ஜனவரி 7 ஆம் தேதி புக்கிட் ஹாலில் அரங்கில் தாய்லாந்தை சந்திக்கிறது.

பின்னர் ஜனவரி 10 ஆம் தேதி பேங்காக் அரங்கில் மீண்டும் தாய்லாந்தை சந்திக்கிறது.

இரண்டு அரையிறுதி ஆட்டத்தில் அதிக கோல் கணக்கில் வெற்றி பெறும் குழு இறுதி சுற்றுக்கு தகுதி பெறும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles