சிலாங்கூர் பிபிபி மகளிர் மற்றும் பண்டான் பிபிபி மகளிர் அன்னையர் தின கொண்டாட்டம் விமரிசையாக நடைபெற்றது!

பண்டான், ஜூன் 3-
சிலாங்கூர் பிபிபி மகளிர் மற்றும் பண்டான் பிபிபி மகளிர் அணி சார்பில் அன்னையர் தின விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

உள்ளூர் சமூகத்தில் உள்ள தாய்மார்களின் தியாகங்கள் மற்றும் அன்பைப் பாராட்டுவதற்காக ஒரு துடிப்பான மற்றும் அர்த்தமுள்ள அன்னையர் தின கொண்டாட்டத்தை சிலாங்கூர் மற்றும் பண்டான் பிபிபி மகளிர் பிரிவினர் ஏற்பாடு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவில் சிலாங்கூர் மாநில பிபிபி தலைவர் டாக்டர் சுரேந்திரன் சார்பில் சிலாங்கூர் பிபிபி மாநிலத் துணைத் தலைவர் திரு. நந்தா தலைமை தாங்கினார்.

விழாவை உற்சாகப்படுத்தும் விதமாக பாண்டன் பிரிவு அம்னோவின் தலைவர் டத்தோ ஜமாலுதீன் ரோபாவும் அவரது குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

அரவணைப்பும் அன்பும் நிறைந்த சூழலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை உற்சாகப்படுத்த 100க்கும் மேற்பட்ட தாய்மார்கள் கலந்து கொண்டனர்.

அதிர்ஷ்டக் குலுக்கல், மிக அழகான ஆடைப் போட்டி, நிகழ்ச்சிகள் மற்றும் தாய்மார்களுக்கான சிறப்பு பாராட்டு அமர்வுகள் உட்பட பல்வேறு சுவாரஸ்யமான நடவடிக்கைகள் இடம் பெற்றன.

இந்த விழா, குடும்பத்தில் தாய்மார்களின் சேவைகள் மற்றும் தியாங்களைப் போற்றுவது மட்டுமல்லாமல், உள்ளூர் சமூகத்தினரிடையே ஒற்றுமையின் உணர்வை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

PPP பெண்கள் குடும்பம் மற்றும் சமூக ஒற்றுமைமை வளர்க்கும் திட்டங்கள் மூலம் சமூகத்தை மேம்படுத்துவதில் தொடர்ந்து உறுதியாக உள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles