
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதேபோல, திமுக கூட்டணியில் போட்டியிடும் கமல்ஹாசனும் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரும் 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த கமல்ஹாசன் ஆகிய 4 பேரும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
தலைமை செயலகத்தில் சட்டமன்ற பேரவை செயலகத்தின் கூடுதல் செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பா.சுப்பிரமணியத்திடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வேட்புமனுக்களை வேட்பாளர்கள் தாக்கல் செய்தனர்

