
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான புதிய அரசாங்கத்தில் உள்நாட்டு வாணிப பயனீட்டாளர் விவகாரத் துறை அமைச்சராக அமானா கட்சி துணை தலைவர் டத்தோஸ்ரீ சாலாவூடின் ஆயோப் இருக்கிறார்.
மக்கள் படும் துயரத்தை போக்க கருணையின் வழி விற்பனை பிரச்சாரத்தை இன்று அவர் தொடங்கினார்.
இன்று 1,000 பொருட்களின் விலைகளைக் குறைத்து கருணையின் விற்பனை பிரச்சாரத்தை கிள்ளான் பண்டமாறனில் உள்ள Econsave சூப்பர் மார்க்கெட்டில் தொடங்கினார்.
இது பயனீட்டாளர்கள் செலவினத்தை 3 முதல் 30 சதவீதம் வரை சேமிக்கும் என்றார்.
கோழி இறைச்சி கிலோ 7 வெள்ளி 90 காசுக்கு விற்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.

