
போலீல் காவலில் இருந்து தப்பித்து வந்த டி. மூர்த்தி வயது 31 என்பவரை கொலை செய்ததாக
M Shart Yanantham Naidu வயது 28, மற்றும் G Kesavaraj வயது 31 ஆகியோர் மீது இன்று ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி இரவு 10.45 மணிக்கு மேல் தாமான் கிளாபாங் புத்ரா என்ற இடத்தில் மூர்த்தியை கொலை செய்ததாக இவர்கள் மீது கொலை குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
குற்றச்சாட்டு புரிந்து கொள்வதாக இருவரும் தலையசைத்தனர்.
இவர்களின் சார்பில் வழக்கறிஞர் டத்தோ சீலன் அர்ஜூனன் வாதாடுகிறார்.

