

பீடோங், தை ஏங் தோட்ட ஆலயத்தில் ஸ்ரீ இராம பிரானுக்கு பட்டாபிஷேகம் நேற்று மிகவும் நடைப்பெற்றது.
இவ்விழாவில் தொழில் முனைவர் மேம்பாடு கூட்டுறவு துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கலந்து சிறப்பித்தார்.
இத்தருணத்தில் தோட்ட துண்டாடல் காரணமாக தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், கோவில் மற்றும் அதன் நிலங்களின் நிலைப்பாடுகள் மற்றும் அதன் பதிப்புரிமை பற்றியும் துணை அமைச்சரிடம் முன் வைக்கப்பட்டது.
இந்நாட்டில் தோட்டத் தொழிலாளர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கம் அனைத்து வகையிலும் உதவி புரியும் என்று சரஸ்வதி கந்தசாமி தெரிவித்தார்.

