
நாட்டில் முதல் முறையாக ஒற்றுமை அரசாங்கம் அமைந்துள்ள நிலையில், கொண்டாடப்படும் முதல் பொங்கல் பண்டிகை இதுவாகும்.
கடந்த இரண்டு-மூன்று ஆண்டுகளாக, பொங்கல் பண்டிகை மிதமான அளவில் கொண்டாடப்பட்ட நிலையில், இந்த 2023-ஆம் ஆண்டில், பாரம்பரிய பெருமை மிளிரும் வகையில் சிறப்பாகக் கொண்டாட மக்கள் அனைவரும் தயாராகி வருகின்றனர்.
மலேசிய மக்கள் அனைவருக்கும் பொருளாதாரம், கல்வி, வர்த்தகம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் வளப்பத்தைக் கொண்டுவரும் நந்நாளாக இந்தப் பொங்கல் பண்டிகை அமைய வாழ்த்து தெரிவிப்பதாக மலேசியத் தாமரைக் குழுமத்தின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ துரைசிங்கம் பிள்ளை வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

