புகைமூட்டம்- சிலாங்கூர், மேற்கு ஜோகூர் கடுமையாகப் பாதிப்பு

ஷா ஆலம், ஜூலை 22 – இந்தோனேசியாவின் மத்திய மற்றும் தெற்கு சுமத்ராவில் உண்டான  காட்டுத் தீயிலிருந்து வெளிப்படும் புகையைக் கொண்டுவரும் தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக  சிலாங்கூர் மற்றும் ஜோகூரின் மேற்குப் பகுதி எல்லை தாண்டிய புகை மூட்டத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

தீபகற்பத்தின் மேற்கு கடற்கரைக்கு புகையை கொண்டு வரும்  தற்போதைய காற்றின் திசைக்கு  ஏற்ப, சம்பந்தப்பட்ட பகுதியில் அதிக எண்ணிக்கையிலான வெப்பத் திட்டுகள்  இருப்பதை செயற்கைக்கோள் படங்களின் மீதான ஆய்வு  உறுதிப்படுத்துகிறது என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் (மெட்மலேசியா) துணைத் தலைமை இயக்குநர்  (நடவடிக்கை ) அம்புன் டிண்டாங் கூறினார்.

உண்மையில், செயற்கைக்கோள் படங்கள் மூலம் இதைக் கண்டறிய முடியும். ஏனெனில் செயற்கைக்கோள் படங்கள் சம்பந்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை உட்பட வெப்பத் திட்டுகள்  அல்லது தீ பரவியப் பகுதிகள்  பற்றிய தகவல்களை வழங்க முடியும். செயற்கைக்கோள் படங்கள் புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கண்டறியவும் உதவுகின்றன என அவர் சொன்னார்.

இருப்பினும், புகை மூட்டத்தின்  இயக்கத்தைக் கணிக்க காற்றின் திசை மற்றும் வேகத்தின் அடிப்படையில் முன்னறிவிப்பு மாதிரிகளை நாங்கள் சார்ந்துள்ளோம்.
சுமத்ராவில் அதிக எண்ணிக்கையிலான வெப்பப் புள்ளிகளை செயற்கைக்கோள் படங்கள் கண்டறிந்துள்ளன.

bernama

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles