
புத்ராஜெயா: ஜூலை 23-
குறைந்த விலையில் பொருட்களை வாங்க ரஹ்மா மடானி விற்பனை திட்டத்திற்கு 600 மில்லியன் ரிங்கிட் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்தார்..
முன்னர் அறிவிக்கப்பட்ட 300 மில்லியன் ரிங்கிட்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ரஹ்மா மடானி விற்பனைக்கான ஒதுக்கீடு 600 மில்லியன் ரிங்கிட்டாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
இந்த கூடுதல் ஒதுக்கீடு நாடு முழுவதும் உள்ள 600 மாநில சட்டமன்றங்களையும் உள்ளடக்கிய இடங்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்துப்படும் என்று இன்று நாட்டு மக்களுக்கு பல திட்டங்களை அறிவித்தபோது அவர் இதனை குறிப்பிட்டார்.

