
காளிதாஸ் சுப்ரமணியம்
சுபாங் ஜூலை 27-
டிக் டோக் மூலம் தங்க விற்பனை தொடர்பாக மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று மலேசிய இந்தியர் பொற்கொல்லர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் கேட்டுக் கொண்டுள்ளார்.
இப்போது டிக் டோக்கில் தங்க ஆபரணங்கள் விற்பனை ஒரு டிரான்டாக மாறி வருகிறது.
இப்போது டிக்டோக்கை திறந்தால் தங்க ஆபரணங்கள் விற்பனை குறித்து விளம்பரங்கள் செய்யப்படுகிறது.
இந்த தங்க விற்பனை முறையானதா? என்பதை மக்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மேலும் அது உண்மையான தங்கம் தானா என்பதையும் மக்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.

