பேரா மலையாளிகள் சங்கத்தின் ஓணம் பண்டிகை விழா விமரிசையாக நடைபெற்றது! சிவநேசன் 10,000 வெள்ளி மானியம்

ஈப்போ, செப் 23-
ஈப்போவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மந்திர் மண்டபத்தில் பேராக் மலையாளி சங்கம் (PMA) ஓணம் பண்டிகையை சிறப்பான முறையில் நடத்தியது.

பேராக் சுகாதாரம், மனிதவளம், தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் இந்திய விவகாரக் குழுவின் தலைவர் அ. சிவனேசன் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்வைத் தொடக்கி வைத்தார்.

முன்னதாக அவரை சங்க உறுப்பினர்கள் மேள தாளத்துடன் வரவேற்றனர்.

இதில் வட மலேசிய மலையாளி சங்கம், சுங்கை சிப்புட் மலையாளி சங்கம் மற்றும் அனைத்து மலேசிய மலையாளி சங்கம் (AMMA) ஆகியவற்றின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

சிவநேசன் தனது உரையில் சங்கம் செயல்பாடுகளுக்கான திட்டங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

பல்வேறு செயல்பாடுகளை நடத்தியதற்காக சங்கத்தைப் பாராட்டினார், மேலும் மருத்துவ முகாம்களை நடத்துமாறு கேட்டுக் கொண்ட அவர் அதற்கு தேவையான உதவிகள் செய்யவும் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் பேரா மலையாளிகள் சங்கத்திற்கு 10,000 ரிங்கிட் நிதி உதவி அளிப்பதாக உறுதியளித்தார்.

இந்த நிகழ்வில் பேசிய பேரா மலையாளிகள் சங்கத் தலைவர் சரளா கோவிந்தன் நாயர் , கடுமையான அட்டவணை மற்றும் பல பொறுப்புகள் இருந்தபோதிலும், நிகழ்வில் கலந்து கொண்டதற்காக சிவநேசனைப் பாராட்டினார்.

மாநிலத்தில் கலாச்சார மற்றும் சமூக நிகழ்வுகளுக்கு சிவநேசன் அளித்து வரும் ஆதரவுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

இந்த நிகழ்வின் சிறப்பம்சம், 16 மலையாள பாரம்பரிய உணவுகளுடன் பரிமாறப்பட்ட சைவ மதிய உணவு, இது பேரா மாநில மலையாளிகள் சங்கத்தின் மகளிர் பிரிவினர்களால் தயாரிக்கப்பட்டது, ஆண்கள் காய்கறிகளை வெட்ட உதவினார்கள்.

ஓணம் கேரளாவின் வளமான கலாச்சார பாரம்பரியம், சமூக பிணைப்பு மற்றும் ஒரு ஆட்சியாளருக்கும் அவரது மக்களுக்கும் இடையிலான அன்பு மற்றும் பக்தியின் காலத்தால் அழியாத கதையை பிரதிபலிக்கிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles