
பூச்சோங் பெர்டானாவில் அருள் பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் – பெருமாள் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று காலையில் ஆகம முறைப்படி மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
ஆலயத் தலைவர் டத்தோ பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த மகா கும்பாபிஷேகத்தில் ம இகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி. மோகன் – டத்தின் லோகேஸ்வரி தம்பதியர், மனித வள அமைச்சர் வ. சிவகுமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ கணபதி ராவ், கின்ராரா சட்டமன்ற உறுப்பினர் இங் ஸி ஹான், ஜசெக முக்கிய தலைவர் டி. கண்ணன், கணபதி ராவ் அரசியல் செயலாளர் செகு ஆனந்த், மனித வள அமைச்சரின் செயலாளர் சுகுமாரன் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.


