
தைப்பூச திருநாளை முன்னிட்டு நாளை பிப்ரவரி 5ஆம் தேதி பத்துமலை திருத்தலத்தின் நுழைவாசலில் அன்னதானம் வழங்க இருப்பதாக ஜாஸ்மின் சோப் நிறுவனத்தின் செயல்முறை நிர்வாகி ஸ்ரீ குமரேசன் தெரிவித்தார்.
தைப்பூசத்தன்று மதியம் 12 மணி அளவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்துள்ளோம்.
மேலும் பிப்ரவரி 3ஆம் தேதி முதல் பத்துமலை திருத்தளத்தில் சிறப்பு விற்பனையில் ஈடுபட்டு வரும் ஜாஸ்மின் கருமஞ்சல் சோப் நிறுவனம் அங்கு பந்தல் அமைத்து மிக குறைந்த விலையில் தங்கள் சோப்புகளை விற்பனை செய்து வருகிறது.
அதோடு நாளை தைப்பூசத்தன்று மாலை 3 மணி முதல் 5 மணி வரை சிறப்பு விற்பனை ஒன்று நடைபெறவிருக்கிறது.
10 சோப்புகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிர்ஷ்ட குழுவிற்கு தேர்வு பெற்று பரிசுகளை எடுத்துச் செல்லும் வாய்ப்பை ஜாஸ்மின் நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது என்று அவர் சொன்னார்.

