
காளிதாஸ் சுப்ரமணியம்
செமினி டிச 14-
ஏழை எளிய மக்களுக்காக ஐபிஎப் கட்சியை தோற்றுவித்தவர் அமரர் டான்ஸ்ரீ எம்.ஜி. பண்டிதன் ஆவார்.
ஐபிஎப் கட்சியின் வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்தவர் டான்ஸ்ரீ பண்டிதன் ஆவார்.
அதேபோல் ஐபிஎப் கட்சியின் முன்னாள் தலைவர் டத்தோ எம். சம்பந்தன் அவர்களும் முக்கிய சேவையாற்றியவர்.
ஐபிஎப் கட்சி தோற்று விக்கப்பட்டு 35 ஆண்டுகள் ஆகின்றன.
டான்ஸ்ரீ பண்டிதன் மற்றும் டத்தோ சம்பந்தன் ஆகியோர் ஐபிஎப் கட்சியின் மாபெரும் தலைவர்கள்.
அந்த வகையில் எதாவது ஒரு சாலைக்கு டான்ஸ்ரீ எம் ஜி.பண்டிதன் பெயரை சூட்டுங்கள் என்று டத்தோ லோகநாதன் இன்று நடைபெற்ற ஐபிஎப் பேராளர் மாநாட்டில் தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடியை கேட்டுக் கொண்டார்.

